search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரடங்கு உத்தரவு நீக்கம்"

    இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நீக்கப்பட்டது. #Lankbombings #Lankaliftscurfew
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 253 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து வன்முறை சம்பங்களை தவிர்க்கும் வகையில் தாக்குதல் நடைபெற்ற அன்றிரவு 8 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், நாள்தோறும் இந்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது.



    இந்நிலையில், கல்முனை, சம்மந்துறை, சவாலக்கடே ஆகிய 3 பகுதிகளை தவிர நாடு முழுவதும் முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நீக்கப்பட்டதாக இலங்கை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ரிவன் குணசேகர தெரிவித்துள்ளார். #Lankaliftscurfew #Lankanightcurfew #Lankbombings
    ×